என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரபு சாலமன்"
- இந்நிலையில் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது
- பிரபுசாலமன் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்
நடிகை வனிதா விஜயகுமார் - ஆகாஷ் தம்பதியின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி. இந்நிலையில் வனிதா-ஆகாஷ் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று உள்ளனர்.
இதனால் விஜய் ஸ்ரீஹரி தனது அப்பா ஆகாஷுடன் வசித்து வருகிறார். தற்போது விஜய் ஸ்ரீஹரி வாலிபனாக வளர்ந்து ஹீரோ தோற்றத்தில் உள்ளார்.லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீஹரியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலவித 'கமெண்ட்ஸ்கள்' பதிவிட்டனர். அதில் அவரது மாமா அருண் விஜய் போன்று இருப்பதாக கூறி உள்ளனர்.
அழகான தோற்றத்தில் பிட்டாகவும் , ஹேண்ட்சம் ஆகவும் இருக்கிறார் என வர்ணித்தும் உள்ளனர்.இந்தி நடிகர் ரன்பீர் கபூர் தோற்றத்தில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். வனிதாவின் ஜாடை போன்றும் தாத்தா விஜயகுமார் இளம்வயது தோற்றம் போன்று அவர் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
விஜய் ஸ்ரீஹரியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை விரைவில் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கியுள்ள செம்பி திரைப்படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடித்திருக்கின்றனர்.
செம்பி
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். 'செம்பி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "செம்பி! செல்ஃபி எடுத்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வதைப் போல,'செம்பி' முழுக்க பிரபு சாலமன் அவர்களின் பேராண்மையை ரசித்தேன்.
செம்பி
பெரும் தைரியத்துடன் கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளா அவர்களையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதையே மைனாவாக்கி அதேயளவு அழகுணர்ச்சியும், அதிரடி கனெக்ட் செய்யும் கதைக்களமும் ஒரு குற்றத்திற்கு உரிய தீர்ப்பையும் இப்படிக் கூட செயல்படுத்த முடியும் என பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார். ஒளிப்பதிவும் இசைநுட்பமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு சமமாக் வென்றிருக்கிறது. இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
செம்பி!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 29, 2022
செல்ஃபி எடுத்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வதைப் போல,'செம்பி' முழுக்க
பிரபு சாலமன் அவர்களின் பேராண்மையை ரசித்தேன். பெரும் தைரியத்துடன் கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளா அவர்களையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதையே மைனாவாக்கி (அதேயளவு அழகுணர்ச்சியும், அதிரடிcontinue pic.twitter.com/UF5RcZHk52
- இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’.
- இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.
செம்பி
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
செம்பி
'செம்பி' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’.
- இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.
செம்பி
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செம்பி போஸ்டர்
அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
We are extremely happy to announce our association with @prabu_solomon's #SEMBI, releasing in cinemas near you on Dec 30th!@prabu_solomon @tridentartsoffl @Udhaystalin @i_amak #KovaiSarala @nivaskprasanna @tridentartsoffl @arentertainoffl #AjmalKhan @actressReyaa @teamaimpr pic.twitter.com/x4ZCVS42Ok
— Red Giant Movies (@RedGiantMovies_) November 25, 2022
தற்போது, இதன் டிரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே படத்தின் ரிலீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்